வெடிக்கும் குட்கா ஊழல்.. முதல்வருடன் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு.. முக்கிய முடிவு?
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு நடத்தி வருகிறார்.
Recommended Video
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு நடத்தி வருகிறார்.
குட்கா ஊழல் தற்போது தமிழகத்தில் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஆளும்கட்சி இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறது. நேற்று முதல் நாள் குட்கா ஊழல் காரணமாக தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது.
அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, பாண்டிச்சேரி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இத்தனை பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில், அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் பழனிச்சாமியை திடீர் என்று சந்தித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு நடத்தி வருகிறார்.
பல முக்கிய விஷயங்கள் குறித்து இதில் அவர்கள் விவாதித்து வருவதாக தகவல் வருகிறது. இதன் பின் முக்கிய அறிவிப்பு எதாவது வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.