ஆஹா.. தினகரன் வெளியில் வருகிறாரே.. குலை நடுக்கத்தில் அமைச்சர்கள்!
சென்னை: டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வருவது யாருக்கு சந்தோஷமோ என்னவோ நிச்சயம், பல அமைச்சர்களுக்குப் பெரும் சங்கடமாக இருக்கிறதாம். பலரோ நடுக்கத்தில் உள்ளனராம்.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க பேரம் பேசப்பட்டதாக தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. அதில் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டார் தினகரன்.
கிட்டத்தட்ட 35 நாள் சிறை வாஸத்துக்குப் பிறகு ஜஸ்மீண் கிடைக்க, இன்று உற்சாகமாக வெளியே வருகிறார் அவர். அவர் ஜாமீனில் வெளிவரும் நிலையில், மூத்த அமைச்சர்கள் பலருக்கும் நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

நினைப்பில் மண்
அவ்வளவு எளிதில் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்றே நினைத்திருந்தனர் முதல்வர் உள்பட சீனிய அமைச்சர்கள். இலைக்கு லஞ்சம் விவகாரத்தில் ஜாமீன் கிடைத்தாலும், அமலக்கத்துறை போட்டுள்ள வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். அதனால் ரொம்ப நாளைக்கு அவர் உள்ளே இருப்பார் என நம்பிக்கையாக இருந்தனர்.

ஒரே மாதத்தில் வந்து விட்டாரே
ஆனா, ஒரே மாதத்தில் அவர் ஜாமீனில் வெளிவருவதால் பயந்துபோயிருக்கிறார்கள். காரனம், தினகரன் சிறைக்கு போவதத்கு முன்பு அவரை கடுமையாக எதிர்த்துக்கொண்டதும், சிறைக்கு சென்ற பிறகு அவரை அமைச்சர்கள் யாரும் போய் சந்திக்காமல் இருந்ததும் தான் என்கிறார்கள்.

ஆளாளுக்கு போட்ட ஆட்டம்
மேலும், கட்சியை ஆட்சியையும் கட்டுப்படுத்த ஒரு தலைமை இல்லாததால் அனைத்து அமைச்சர்களும் தனி ஆவர்த்தனத்துடன் அதிகார தொணியில் நடந்து வருவதும் தினகரனை எரிச்சல் படுத்திதிருக்கிறது. சிறையில் அவர் இருந்த நிலையிலும் தமிழகத்தில் என்னென்னெ நடந்து வருகிறது என்பதை அப் டூ டேட்டாக அறிந்தே வைத்திருக்கிறார்.

ரியாக்ஷன் காட்டமா இருக்குமோ
மேலும், கட்சியின் துணைபொதுச்செயலர் இன்னமும் அவர்தான். அதனால் வெளியில் வந்ததும் எந்த மாதிரி ரியாக்சன் காட்டப்போகிறாரோ என சீனியர்கள் ஒவ்வொருவரும் நேற்றிலிருந்து அவ்வவ்போது விவாதித்தபடி இருக்கிறார்கள்.

சென்னை சில்க்ஸை விட டென்ஷன்
இதனால், அமைச்சர்கள் மத்தியில் சென்னை சில்க்ஸ் விபத்து ஏற்படுத்திய பதட்டத்தை விட, தினகரனின் விடுதலை கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அதிமுக அம்மா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications