பஸ் ஸ்டிரைக்: அமைச்சர்கள் சொந்த மாவட்டங்களுக்கு விரைந்து செல்ல எடப்பாடி உத்தரவு
அமைச்சர்கள் உடனடியாக சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அமைச்சர்கள் உடனடியாக சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்ததால் போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வ வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பஸ் ஸ்ட்ரைக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள சூழலை சமாளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications