ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை!
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 108வது ஜெயந்தி விழாவும், 53வது தேவர் குருபூஜையை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் விழா ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்ததப்பட்டுள்ளன.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்குச் செல்லும் வழியில். அமைச்சர் செல்லூர் ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா, திமுக., பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்கள், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கொடநாடு முகாம் அலுவலகத்தில் முத்துராமலிங்கத்தேவர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு உள்ளிட்ட 8 அமைச்சர்கள், பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்
கமுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பால் குடம் எடுத்து வந்து நினைவாலயத்தில் உள்ள தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். நூற்றுக்கணக்கானோர் முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications