அமைச்சர்களின் கார்களில் அடைத்துக் கொண்டு செல்லப்படும் எம்.எல்.ஏக்கள்!!
சென்னை: போகும்போது ஆம்னி பஸ்களில் ஜாலியாகப் போன எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை தற்போது கார்களில் போட்டு அடைத்துக் கொண்டு வருகின்றனர்.
கூவத்தூர் ரிசார்ட்டில் கடந்த 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்களை இன்று காலை எழுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக கூட்டி வருகின்றர். கூவத்தூருக்கு முதல் நாள் வந்தபோது ஆம்னி பஸ்களில் கூட்டி வந்தனர். ஆனால் ரிட்டர்ன் கார்களில் வந்து கொண்டுள்ளனர்.

அமைச்சர்களின் கார்களில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்துக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சரின் பொறுப்பிலும் 3 முதல் 5 எம்.எல்.ஏக்கள் வரை அடைத்துக் கொண்டு கூட்டி வருகின்றனராம். கார்களில் உள்ள இட வசதியைப் பொறுத்தும், கார்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை உள்ளதாம்.
வேறு வாகனத்தில் அனுப்பினால் தப்பி விடுவார்கள் என்ற அச்சத்தால் அமைச்சர்கள் பாதுகாப்பில் கார்களில் ஏற்றி அனுப்பியுள்ளனராம். இது போதாது என்று கூடவே அடியாட்கள் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. காரை எங்கேயும் வழியில் நிறுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இப்படி அடைத்துக் கொண்டு வரும் எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் நிரந்தரமாக விடுதலை செய்வார்களா அல்லது நிரந்தரமாக கூவத்தூரில் கொண்டு போய் மறுபடியும் அடைத்து விடுவார்களா என்பது தெரியவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications