வேலூர் முதல்வர் விழாவில் மின்கசிவால் தீ விபத்து - அசராமல் பேசிய எடப்பாடி பழனிச்சாமி
வேலூரில் நடைபெற்றுவரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வேலூர்: வேலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கும் போதே மின்கசிவினால் லேசாக தீ பற்றியது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
புகை மூட்டத்திற்கு நடுவே நிறுத்தாமல் பேசி முடித்தால் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிகொண்டிருக்கும் போதே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாவின் ஆன்மா, எம்ஜிஆரின் ஆன்மா இருக்கும் வரை நம்மை எதுவும் செய்யாது என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் நல்லாட்சியை கலைத்துவிட்டு ஆட்சியை பிடிக்க சிலர் முயற்சி செய்வதாக தெரிவித்தார். தமிழகத்தில் எந்த சவால் வந்தாலும் சந்திப்போம் என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, பேச்சை குறைத்துக்கொண்டு, செயலில் தீவிரம் காட்டுவதாக கூறினார். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடைந்துள்ளது.
தமிழக கோவில்களில் சமபந்தி திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆமை கழுகு கதை ஒன்றையும் கூறி எதிர்கட்சிகளை சாடினார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications