சேலத்தில் வெட்கக்கேடு: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன்
சேலம்: சேலத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கும் பாலகுட்டப்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கூலி வேலை பார்த்து வந்தார். சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை தனது சைக்கிளில் வைத்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பள்ளி செல்லும் வழியில் அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதை சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். உடனே சிறுமியின் தாய் இது பற்றி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் பாலியல் பலாத்காரம், கள்ளத் தொடர்பு ஆகியவை அதிகரித்து வருகின்றன. மேலும் இது தொடர்பான கொலை சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தத்திற்குரியது.












Click it and Unblock the Notifications