காவிரி தண்ணீர் வரும்.. கர்நாடக அரசு முடிவை பற்றி கவலையில்லை.. ஜெயக்குமார் பேட்டி
விவசாயிகளையும் அதிமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விவசாயிகளையும் அதிமுகவையும் பிரிக்க நினைக்கும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் திட்டம் நிறைவேறாது. விவசாயிகளையும் அதிமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விவசாயிகளையும் அதிமுகவையும் பிரிக்கும் கமல்ஹாசனின் திட்டம் நிறைவேறாது. விவசாயிகளையும் அதிமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகாவிடமிருந்து 177.75 டிஎம்சி தண்ணீரைப் பெற்றேத் தீருவோம். கர்நாடகாவின் முடிவைப் பற்றிக் கவலை இல்லை." என்று கூறினார்.

திமுகவைப் பற்றி பேசிய ஜெயக்குமார், "திமுகவில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதலமைச்சர் பதவிக்கு போட்டி நிலவுகிறது" என்று விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications