சென்னை ஐஐடியில் காணாமல் போன மாணவி... ஆன்மீகத் தேடலால் இமயமலைக்கு போவதாக கடிதம்
சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்மீகத் தேடலுக்காக தாம் இமயமலைக்கு செல்வதாக மாணவி எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படித்து வந்தவர் பிரத்யூஷா. அவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

விடுதியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரத்யூஷாவை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பிரத்யூஷாவின் அறையில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்கடிதத்தில், ஆன்மீகத் தேடலுக்காக தாம் இமயமலை சென்று சன்னியாசியாகப் போவதாக அந்த மாணவி குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அது மாணவி பிரத்யூஷா எழுதிய கடிதம்தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications