அத்தைக்கு மீசை முளத்தால் சித்தப்பாவா? திமுக வெற்றி குறித்து மு.க. அழகிரி பதில்!!
சேலம்: லோக்சபா தேர்தலில் திமுக வெற்றி பெற சாத்தியம் இல்லை.. அப்படி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு 'அத்தைக்கு மீசை முளத்தால் சித்தப்பாவாகுமா?" என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார்.
சேலம் விநாயகா மிஷன் நிறுவனர் சண்முகசுந்தரம் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்க சேலம் வந்திருந்த மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆதரவாளர்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகின்றேன். அவர்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், நாங்கள் திமுகதான். கருணாநிதிதான் எங்கள் தலைவர்.
நாங்கள் திமுக கரை வேட்டி கட்டியே இருப்போம். என்னை கருணாநிதி நீக்கியது நிர்பந்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு; மிரட்டலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் அந்த முடிவு, அப்படி மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும்.
மிரட்டல் நபர்கள் குறித்து விரைவில் வெளிப்படுத்துவேன். லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி ஜெயிக்கும் என்ற ஜோசியம் எல்லாம் எனக்குத் தெரியாது.
இவ்வாறு அழகிரி கூறினார்.
அப்போது உங்கள் கணிப்பையும் மீறி திமுக வெற்றி பெற்றால்... என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அத்தைக்கு மீசை முளத்தால் சித்தப்பா... என்றாகுமா என்றார் மு.க.அழகிரி












Click it and Unblock the Notifications