For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணையே இல்லை: ஸ்டாலின் தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

ஞ்சிபுரம்: தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவுமே இல்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வந்தார். திருமண விழாவில் பங்கேற்ற அவர் உரை நிகழ்த்தினார்.

MK Stalin slams TN government

அப்போது அவர் கூறுகையில்,

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த உடனேயே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது. இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிக்கைகளுக்கு சட்டமன்ற செயலாளர் முறைப்படி அறிவிக்காமல் இணையதளம் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அவரது ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்பதை தெரிவிப்பதில் என்ன கஷ்டமாம். அதற்கு ஏன் ஒளிந்து, மறைய வேண்டும். இது அரசுக்கு வெட்கக்கேடானது. ஆக மொத்தம் தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவுமே இல்லை என்றார்.

English summary
DMK treasurer MK Stalin has slammed TN government for hesitating to announce that Srirangam constituency is vacant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X