ஆளுநர் மாளிகை நோக்கி திமுக திடீர் பேரணி... ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது
ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
Recommended Video

சென்னை: திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து கறுப்பு கொடியுடன் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிராக திமுகவினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநில உரிமைகளைப் பறிக்கிறது என குற்றம்சாட்டி திமுகவினர் கறுப்புக் கொடி காட்டினர்.
அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கார் மீது கறுப்பு கொடிகளையும் திமுகவினர் வீசினர். இதையடுத்து 192 திமுகவினரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து கிண்டியிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி மு.க.ஸ்டாலின் தலைமையில் திடீர் பேரணி இன்று நடைபெற்றது. இதையடுத்து போலீஸார் ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்தனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில் மக்களை நேரடியாக ஆளுநர் சந்திக்கக் கூடாது.
ராஜாஜி,நேரு, இந்திரா, மோடிக்கு கறுப்பு கொடி காட்டிய கட்சி திமுக. பிரதமர் மோடி சாலையில் நடமாட முடியாமல் கறுப்பு கொடி காட்டினோம். மாநில உரிமைகளை பறிக்கும் ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும்.
எங்களை கைது செய்து மாலையில் விடுதலை செய்யாமல் சிறையில் அடைக்க வேண்டும். மாநில உரிமைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்றார்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications