ஜல்லிக்கட்டு- மக்களின் கொந்தளிப்பை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும்- ஸ்டாலின் எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; இல்லையெனில் தமிழக மக்களின் கொந்தளிப்பை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இத்தடை தொடருவதால் 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உடனே தீர்ப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணா நிதிநீர் பிரச்சனைக்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பது வரவேற்புக்குரியது.
ஆனால் இதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடியையும் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.
இல்லையெனில் தமிழக மக்களின் கொந்தளிப்பை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications