Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மானாமதுரையே மலைத்து போனது.. சாண்டா கிளாஸ் வேஷம் போட்டு வந்த பெண்.. யாருன்னு பார்த்தா, இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சாண்டா கிளாஸ் வேடம் இட்டு வந்த பெண்ணை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எல்லாம் மலைத்தே போய்விட்டனர்.

மானாமதுரையை சேர்ந்தவர் தமிழரசி. இவர் 2001 ஆம் ஆண்டு மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக சமயநல்லூர தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார்.

MLA Tamilarasi in Santa Claus dress at St Marys Church

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை அமைச்சராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் 2011 ஆம் ஆண்டு மானாமதுரை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மானாமதுரையில் வென்றார். தற்போது இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இவர் திமுக எம்பி கனிமொழியின் நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார். அவருக்கு நெருக்கமானவரும் கூட! இவர் பதவியேற்றது முதல் மானாமதுரைக்கு நலத்திட்டங்களை செய்துவருகிறார்.

இ சேவை மையம், அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு பாடம் எடுப்பது, சமுதாய வளைகாப்பு விழா நடத்தி வைப்பது, மாணவிகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை செய்திருந்தார். இந்த நிலையில் இவர் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மக்களை சந்தித்து பரிசு பொருட்களை கொடுத்துள்ளார்.

சாண்டா கிளாஸ் வேடமணிந்து கிறிஸ்துமஸ் விழவில் தமிழரசி கலந்து கொண்டார். மானாமதுரை புனித அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் பெருமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை கூறினர். இந்நிகழ்வில் இரண்டாவது வார்டு உறுப்பினர் இந்துமதி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி இரண்டாவது வார்டு செயலாளர் திருமுருகன், மேலபசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா சடையப்பன் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்தான் தமிழரசி யாரும் எதிர்பார்க்காத சாண்டா கிளாஸ் வேடத்தில் சென்று குழந்தைகள், பெரியவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் இனிப்புகளையும் வழங்கினார். தமிழரசியை சாண்டா கிளாஸ் வேடத்தில் பார்த்ததும் முதலில் யாரென்று தெரியாமல் மக்கள் விழித்தனர். பிறகு அவர் அணிந்திருந்த முகமூடியை கழற்றியவுடன்தான் அவர் தமிழரசு என தெரியவந்தது.

இதே போல் ஆந்திரா நகரி தொகுதியில் அமைச்சர் ரோஜாவும் சாண்டா கிளாஸ் வேடமணிந்து கிறிஸ்துமஸுக்கு புத்தாடைகளையும் சாக்லேட்டுகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+