சென்னையில் நடமாடும் ஏ.டி.எம்.சேவை... பொதுமக்கள் வரேவேற்பு!
சென்னை அடையாறில் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை அடையாறில் நடமாடும் ஏ.டி.எம்.மில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் பெற்றனர். சிரமம் இன்றி பணம் எடுக்க நடமாடும் ஏ.டி.எம் வசதியாக உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புபை பலர் வரவேற்றாலும் நாடு முழுவதும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதைடுத்து கடந்த சில நாட்களாக புதிய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்காகவும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும், மக்கள் வங்கி, தபால் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடமாடும் ஏ.டி.எம் இயந்திரங்களை செயல்படுத்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், பொதுமக்களுக்கு உடனடி சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம் சேவையை தொடங்கியுள்ளது.
சென்னை, அடையாறில் நடமாடும் ஏ.டி.எம்.சேவை தொடங்கியுள்ளதால் எளிதில் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications