செல்போன் கதிர்வீச்சால் ஆபத்து இல்லையாம்: இனி பயப்படாம பேசுங்க!
மும்பை: செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படாது என்று இந்திய டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்போன் மற்றும் செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று மக்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் செல்போன் கதிர்வீச்சை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை என்கிறார்கள் இந்திய டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள்.
இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் அசோசியேஷன் தலைவரும், மும்பையைச் சேர்ந்த பிரபல கதிர்வீச்சு நிபுணருமான டாக்டர் பவின் ஜங்கரியா கூறுகையில்,

பாதிப்பு இல்லை
செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே நாங்கள் நம்புகிறோம்.

புற்றுநோய்
எந்தவித ஆதாரமும் இன்றி புற்றுநோய் மற்றும் செல்போன் டவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சிலர் கூறினர். இதையடுத்து தான் செல்போன் டவர் கதிர்வீச்சு மனிதர்களுக்கு ஆபத்தானது என்ற பிரச்சனையே துவங்கியது என்றார் பவின்.

கதிர்வீச்சு
பயன்பாட்டை பொருத்து செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்படுத்தலாம் எந்று டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபன்டமென்டல் ரிசர்ச்சின் ரசாயன அறிவியல் பேராசிரியர் ஆர்.வி. ஹொசூர் தெரிவித்துள்ளார்.

டிஎன்ஏ
செல்போன் கதிர்வீச்சால் மரபணு கொல்லப்பட மாட்டாது என்று டாடா மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த பிரபல பிரெய்ன் ட்யூமர்(மூளை கட்டி) நிபுணர் டாக்டர் ராகேஷ் ஜலாலி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார மையம்
செல்போன், செல்போன் டவர் கதிர்வீச்சால் புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகள் வர வாய்ப்பு அதிகம் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications