நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.. அடிக்கடி "வெளியில்" போவதைக் குறைக்கப் போகிறாராம் மோடி!
டெல்லி: எப்பப் பார்த்தாலும் வெளிநாட்டிலேயே இருக்கிறார். இந்தியாவிலேயே இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இந்தப் புது வருடத்தில் முற்றுப் புள்ளி வைக்கப் போகிறாராம் பிரதமர் மோடி. அதாவது இந்த வருடம் அதிக அளவில் வெளிநாடு பயணம் மேற்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் மோடி.
2016ம் ஆண்டு தனது வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ள மோடி இதுதொடர்பாக வெளியுறவுத்துறையுடன் கலந்து ஆலோசிக்கவும் செய்துள்ளார்.
தேவைப்படும் பயணங்களை மட்டுமே மேற்கொள்வது என்றும் எல்லா பயணங்களையும் மேற்கொள்வதில்ல என்றும் மோடி முடிவெடுத்துள்ளாராம். மேலும் உள்ளூர் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

லிஸ்ட்டைக் குறைங்கப்பா
இதுதொடர்பாக அவர் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது தனது சுற்றுப்பயண எண்ணிக்கையை இந்த ஆண்டில் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளாராம்.

சில நாடுகள் மட்டுமே
அதன்படி இந்த வருடத்தின் முதல் பாதியில் ஓரிரு வெளிநாட்டுப் பயணத்தையே பிரதமர் மேற்கொள்ளவுள்ளாராம். முக்கியமான சர்வதேச மாநாடுகளில் மட்டுமே அவர் கலந்து கொள்வாராம்.

19 மாதத்தில் 33 நாடுகள்
மோடி பிரதமராகி 19 மாதங்களாகி விட்டது. இந்த காலகட்டத்தில் அவர் இதுவரை 33 நாடுகளுக்கு போய் வந்து விட்டார். மேலும் மூன்றில் இரண்டு பங்கு உலகத் தலைவர்களை அவர் சந்தித்து விட்டார். அவர் பார்க்காத தலைவர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய தலைவர்களே உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இப்படி அடிக்கடி வெளிநாடு போய் வந்த பிரதமரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடாமல் வாரி வந்தார் மோடி.

உள்ளூரில் அதிக கவனம்
இந்தப் பஞ்சாயத்துக்கு இந்த ஆண்டு முற்றுப் புள்ளி வைக்கிறார் மோடி. இனி இந்தியாவில் அதிக கவனம் செலுத்த அவர் தீர்மானித்துள்ளார். இந்தியாவின் பல முக்கியப் பிரச்சினைகளில் இனி தனி கவனம் செலுத்துவாராம் மோடி.

2016ல் இந்த நாடுகளுக்கு போகிறார்
இதற்கிடையே, இந்த வருடத்தின் முல் சுற்றுப் பயணமாக ஜனவரி 15-16 ஆகிய நாட்கள் அவர் சவூதி செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது பிப்ரவரிக்குத் தள்ளிப் போயுள்ளதாம். அடுத்து மார்ச் மாத கடைசியில் பிரஸ்ஸல்ஸ் செல்கிறார். அதேபோல இந்த ஆண்டு மத்தியில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
-
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications