மோடிக்கு வெளிநாட்டு தலைவர்கள் அழைப்பு: நிரம்பி வழியும் இன்பாக்ஸ்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் நாட்டிற்கு வருமாறு வெளிநாட்டு தலைவர்கள் அழைப்பு விடுத்து அனுப்பும் இமெயில்களால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இன்பாக்ஸ் நிரம்பி வழிவதாக அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது.

இதையடுத்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. அதில் 7 நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தங்களது நாடுகளுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர்.
நிரம்பி வழியும் இன்பாக்ஸ்
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக இ-மெயில் முகவரிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் தொடர்ந்து மோடிக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.அவர்கள் மோடியை நேரில் சந்திக்க அதிக ஆர்வம் கொண்டு இந்த கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இதனால் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இமெயில் இன்பாக்ஸ் வெளிநாட்டு தலைவர்களின் அழைப்பு கடிதத்தால் நிரம்பி வழிவதாக அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் போகும் பிரதமர்
இந்நிலையில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக பூட்டானுக்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) ஜப்பான் செல்கிறார். அப்போது அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச உள்ளார்.
அமெரிக்கா வரவேற்பு
இதேபோல், அமெரிக்காவுக்கு வரும் செப்டம்பர் மாதம் செல்லவிருக்கும் மோடியை வரவேற்க காத்திருக்கிறோம் என அந்நாடு அறிவித்திருக்கிறது.
டாக்காவிற்கு போகும் சுஸ்மா
இந்தியவெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜ் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசத்திற்கு இம் மாதம் 26ம் தேதி செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 26-ம் தேதி பதவியேற்ற சுஷ்மா சுவராஜூக்கு தங்கள் நாட்டிற்கு வருகை தரும் படி வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது அலி கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்தே அவர் வங்கதேசம் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சீன அமைச்சருடன் சந்திப்பு
இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை வரும் ஞாயிற்றுக்கிழமை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து பேச உள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் சிறப்பு தூதராக வரும் சீனவெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யீ சுஷ்மாவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications