மோடிக்கு வெளிநாட்டு தலைவர்கள் அழைப்பு: நிரம்பி வழியும் இன்பாக்ஸ்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் நாட்டிற்கு வருமாறு வெளிநாட்டு தலைவர்கள் அழைப்பு விடுத்து அனுப்பும் இமெயில்களால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இன்பாக்ஸ் நிரம்பி வழிவதாக அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது.

இதையடுத்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. அதில் 7 நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தங்களது நாடுகளுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர்.
நிரம்பி வழியும் இன்பாக்ஸ்
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக இ-மெயில் முகவரிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் தொடர்ந்து மோடிக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.அவர்கள் மோடியை நேரில் சந்திக்க அதிக ஆர்வம் கொண்டு இந்த கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இதனால் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இமெயில் இன்பாக்ஸ் வெளிநாட்டு தலைவர்களின் அழைப்பு கடிதத்தால் நிரம்பி வழிவதாக அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் போகும் பிரதமர்
இந்நிலையில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக பூட்டானுக்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) ஜப்பான் செல்கிறார். அப்போது அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச உள்ளார்.
அமெரிக்கா வரவேற்பு
இதேபோல், அமெரிக்காவுக்கு வரும் செப்டம்பர் மாதம் செல்லவிருக்கும் மோடியை வரவேற்க காத்திருக்கிறோம் என அந்நாடு அறிவித்திருக்கிறது.
டாக்காவிற்கு போகும் சுஸ்மா
இந்தியவெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜ் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசத்திற்கு இம் மாதம் 26ம் தேதி செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 26-ம் தேதி பதவியேற்ற சுஷ்மா சுவராஜூக்கு தங்கள் நாட்டிற்கு வருகை தரும் படி வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது அலி கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்தே அவர் வங்கதேசம் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சீன அமைச்சருடன் சந்திப்பு
இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை வரும் ஞாயிற்றுக்கிழமை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து பேச உள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் சிறப்பு தூதராக வரும் சீனவெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யீ சுஷ்மாவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications