மக்கள் பிரச்னைகளை விட நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் தான் மோடிக்கு அதிக கவனம்: வைகோ
மக்கள் பிரச்னைகளை விட நாடுகள் சுற்றிப்பார்ப்பதில் தான் மோடி கவனம் செலுத்துகிறார் என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
காரைக்கால் : மக்கள் பிரச்னைகளை விட, உலக நாடுகளைச் சுற்றிப்பார்ப்பதிலேயே பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று காரைக்காலில் நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதில் அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. பிரதமர் மோடியும் கர்நாடகத் தேர்தலை மனதில் கொண்டு இந்த விவகாரம் குறித்து பேச மறுத்து வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் என்பது தமிழக பிரச்னை மட்டுமல்ல என்பதை மத்திய அரசு உணரவேண்டும். இதுதொடர்பாக பலமுறை வலியுறுத்தியும், மத்திய அரசு கள்ள மெளனம் காப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்.
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்கள் தண்ணீர் இல்லாமல் இருக்கும் நிலையில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பாஜக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்கிற வன்மத்தோடு மோடி அரசு செயல்படுகிறது.
மக்கள் பிரச்னை குறித்து எந்த வித அக்கறையும் இல்லாத பிரதமர் உலக நாடுகளைச் சுற்றிப்பார்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார். டெல்லிக்கு அடுத்து புதுவை மாநிலத்திலும் மத்திய அரசு ஆளுநர் மூலம் நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications