தமிழகத்தில் 356… சுப்பிரமணியன் சுவாமி கருத்துக்கு மோடி விளக்கம் தர வேண்டும்... திருநாவுக்கரசர்
சென்னை: தமிழகத்தில் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறாரா என்பதை விளக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது:

ராகுல் காந்தி சென்னைக்கு வந்து அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்துவிட்டுச் சென்றதில் அரசியல் ஏதுவும் இல்லை. அது முழுக்க முழுக்க அரசியலற்ற தனிப் பயணம் ஆகும். சோனியாகாந்தியின் விருப்பத்தின்படி அவரது வாழ்த்துகளையும் சேர்த்து சொல்லவே ராகுல்காந்தி அப்போலோவிற்கு வந்தார்.
பொறுப்பு முதல்வர், துணை முதல்வர்கள் குறித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது அவரது சொந்தக் கருத்து. என்னைப் பொருத்தவரை, ஆட்சிக்கு தலைமை வகிக்கும் முதல்வர் உடல் நிலை தேறி வருகிறது; ஆளுநர், தலைமை செயலாளர், மூத்த அமைச்சர்கள் இருக்கிறார்கள்; முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பேணிக் காப்பதாக இருந்தாலும் தமிழக அரசின் பணியை பேணிக் காப்பதாக இருந்தாலும் அது அவர்களுடைய பணி.
அதற்கும் அப்பால், அதிமுக மக்களுடைய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. ஆக, தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய அவசியம் அதிமுகவினருக்கே உள்ளது. காங்கிரஸ் சார்பில் கருத்துச் சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் கவர்னர், அமைச்சர்கள், நிர்வாக தலைவர் ஆகியோருக்கு தமிழக அரசு முறையாக செயல்படுவதில் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் சரியாக செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் 356யை பயன்படுத்துவது குறித்து பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறாரா என்பதை விளக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications