வேலூர் சிறையில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி முருகனிடம் பணம் பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளான முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சிறை காவலாளிகள் வழக்கமான கண்காணிப்பு சுற்றில் ஈடுபட்ட போது முருகனின் கையில் ஒரு நோட்டுபுத்தகம் இருந்ததை அடுத்து வார்டன்கள் சந்தேகம் அடைந்தனர்.
அதையடுத்து அவரது கையில் இருந்த நோட்டினை வாங்கி சோதனைச் செய்து பார்த்தபோது அதில் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் இப்பணவிவகாரம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications