ஏற்காடு இடைத்தேர்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ வாங்கினாலோ சிறை
சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலில் ஓட்டுப்போட பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி இடைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மது, வாக்களிக்க லஞ்சம் கொடுப்பவர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய, இலவசத் தொலைபேசி எண் (1800 425 7050) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுப்பவர்களின் விவரங்கள் வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டு விசாரணை நடத்தப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலோ, பொதுமக்கள் வாக்குக்கு பணம் பெற்றாலோ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். பிடிபடுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றார்.
நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அரசு காரில் மருத்துவமனைக்கு வந்து ஆய்வு நடத்தியது தொடர்பாக எனக்குப் புகார் வந்துள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் பிரவீண்குமார் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications