ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் குற்றம்: தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்

Subscribe to Oneindia Tamil

praveen kumar
மதுரை: பொதுமக்கள் பணத்துக்காக ஓட்டுக்களை விற்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் குறித்து புகார் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி.அபய்குமார் சிங், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனந்த குமார் சோமானி, போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது:

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுத்தாலும், அதை வாங்க வாக்காளர்கள் மறுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் விசாரணை என்று வரும் போது, ஆதாரத்துடன் யாரும் குற்றம் சொல்வதில்லை.

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் எல்லாம் வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுபற்றி எஸ்.எம்.எஸ். மூலம் கூட புகார் கொடுக்கலாம். செல்போனில் எடுக்கப்படும் புகைப்பட ஆதாரம் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆதாரங்கள் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+