94 தொகுதிகளில் அதீத பணப்புழக்கம்.. பீதியைக் கிளப்பும் தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தின் 94 சட்டசபைத் தொகுதிகளில் பணப்புழக்கம் வழக்கத்திற்கு விரோதமாக அதிகமாக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இங்கு கண்காணிப்பை அதிகரிக்க அது உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம், பொருள் கொடுப்பதையும் கட்சிகள் சில முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், வாக்காளர்களுக்கு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் தீவிரக் கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 94 தொகுதிகளில் பணப்புழக்கம் வழக்கத்திற்கு விரோதமாக அதிகமாக இருப்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது.
பணப்புழக்கம்...
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், "பணப்புழக்கம் அதிகமிருக்கும் 94 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு ஒரு சிறப்பு செலவின பார்வையாளர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.
கண்காணிப்பு தீவிரம்...
கண்காணிப்பு பணிகளுக்காக பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட உள்ளனர். 12ம் தேதி முதல் இந்த 94 தொகுதிகளிலும் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
வாக்கு எண்ணும் மையங்கள்...
234 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ண 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும். வரும் 9 அல்லது 10-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி சென்னை வர வாய்ப்பு உள்ளது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பணம் பறிமுதல்...
சமீபத்தில் கரூரில் அன்புநாதன் என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் பல கோடி ரூபாய் பணம் சிக்கியது. இதேபோல மேலும் சில இடங்களிலும் பணம் சிக்கியுள்ளது. தொடர்ந்து பணம் சிக்கி வருவதும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications