சென்னை மழையால் 10,640 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம்!
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் 10,000க்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. மழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சென்னை மற்றும் நகர்புற பகுதிகளில் சாலைகள் மழை நீரால் மூழ்கியுள்ளன.

நாகை மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான விளை நிலங்கள் மழை நீரால் மூழ்கி வீணாகியுள்ளன. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் புறநகர் பகுதிகளில் மணிமங்கலம், ஆதனூர்,முடிச்சூர், மடிப்பாக்கம், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
இதனால் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் பலரும் மேடான பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 10,640 பேர் 114 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அந்தப் பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி பணியாளர்கள் வேலை பார்த்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். புறநகர் பகுதிகளில் இதுபோல மழை நீர் தேங்க ஆக்கிரமிப்புகளே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பகுதிகளில் இருக்கும் 7000க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு ஆவண செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications