Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனநலம் பாதிக்கப் பட்ட 18 வயது மகன்... கருணைக்கொலை செய்யக்கோரி தாய் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனநிலை பாதிக்கப் பட்ட தனது 18 வயது மகனை கருணைக் கொலை செய்யக் கோரி தாயே காவல் நிலையத்தில் மனு அளித்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று நேற்று சென்னையில் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் 13வது குருக்குத் தெருவைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(40)யின் மகன் ரோகித் (18). ரோகித்திற்கு மனநிலை பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கண்ணகி நகர் காவல்நிலையத்துக்குச் சென்ற பாக்கியலட்சுமி, மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

என் மகன் ரோகித் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்தேன். ஆனால் அவனது மூர்க்கத்தனமான செயல்பாடு காரணமாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். கடந்த 6 மாதங்களாக நான் தான் அவனை பாதுகாத்து வருகிறேன்.

அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், பெண்களை அசிங்கமாக திட்டுவதாக கூறி அவனை அடித்து விடுகின்றனர். தினமும் யாரிடமாவது அடி வாங்கி வீட்டிற்கு வருகிறான். உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. திடீரென வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைக்கிறான். பொருட்களை அள்ளிப்போட்டு தீ வைத்து விடுகிறான்.

எப்போதும் அவனை அருகில் இருந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது. வெளியே விட்டால் யாரையாவது அடித்து விடுகிறான். அவன்படும் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. என்னாலும் அவனை கவனிக்க முடியவில்லை.

சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறேன். சகோதரி வீட்டில் தான் எனக்கு சாப்பாடு போடுகின்றனர். எனவே எனது மகன் ரோகித்தை கருணை கொலை செய்துவிடுங்கள்' என இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+