நீடிக்கும் கண்ணாமூச்சி ரே ரே.. அமைச்சர்கள் விழாக்களை புறக்கணிக்கும் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்!
அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார் கலந்து கொள்ளும் விழாக்களை எம்எல்ஏ-க்களும், எம்.பி.க்களும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
கடலூர்: கடலூரில் வெள்ளத்தடுப்புக்காக ஆளில்லா விமானம் அறிமுக விழாவில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார் கலந்து கொண்டதால் அந்த விழாவை 4 அதிமுக எம்எல்ஏ-க்களும், 2 எம்பி.க்களும் புறக்கணித்தனர்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தடுப்புக்காக ஆளில்லா விமானம் அறிமுக விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் எம்.பி. சம்பத், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த விழாவை அதிமுகவின் 4 எம்எல்ஏ-க்களும், 2 எம்.பி.க்களும் புறக்கணித்தனர்.

இந்த விழாவுக்கு அதிமுக எம்பிக்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி உள்ளிட்டோரும், எம்எல்ஏ-க்கள் முருகுமாறன், கலைச்செல்வன், பாண்டியன், சத்யா உள்ளிட்டோரும் வரவில்லை. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான மாரத்தான் போட்டி நிகழ்ச்சியிலும் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்றததால் மேற்கண்ட எம்.பிக்களும், எம்.எல்.ஏக்கள் பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன், பன்னீர்செல்வம் ஆகிய 4 பேரும் புறக்கணித்தனர்.












Click it and Unblock the Notifications