சென்னையில் தடம்புரண்ட கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில்! ரயில் சேவை கடும் பாதிப்பு!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பறக்கும் ரயில் தடம் புரண்டதால் கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான ரயில் பாதையில் கடற்கரையில் இருந்து பூங்காநகர் ரயில் நிலையம் வரை தரைவழியாக செல்லும். அதன் பின்னர்தான் மேலே செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பூங்காநகர் ரயில் நிலையம் தரைப்பகுதியில் பயணிகள் ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இருப்பினும் கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தண்டவாளத்தில் இருந்து ரயில் விலகிய பகுதியில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் பி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications