முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 136 அடியாக உயர்வு – பென்னிகுயிக் சிலைக்கு மதுரை மக்கள் மரியாதை!
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்ததை அடுத்து மதுரையில் அவ்வணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலைக்கு விவசாயிகள் பொங்கல் வைத்து நன்றி செலுத்தினர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 136 அடியை எட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது அணையில் நீர் மட்டம் 136.30 அடி உள்ளது. இதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் குடிநீர் தேவை மற்றும் விவசாயப் பணிகளுக்கு நீர் தட்டுப்பாடு நிலவாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதனால், மதுரை, தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள பென்னிகுயிக் சிலை முன்பு பொங்கல் வைத்து பொது மக்கள் நன்றி செலுத்தினர். மேலும் சாலைக்கு வெளியே நின்ற, சென்ற மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் தென் மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர்த் தேவையைக் கருதி, தனி மனிதராக நின்று இந்த அணையைக் கட்டி முடித்தவர் பென்னி குயிக். இந்த அணையைக் கட்டும் பணியை அரசு கைவிட்டபோது, பிரிட்டனிலிருந்த தனது சொத்துகள், மனைவியின் நகைகளையெல்லாம் விற்று பணம் திரட்டி இந்த அணையைக் கட்டி முடித்தார் பென்னி குயிக்.
இதனால் அவரை தெய்வமாகவே வழிபடும் தென் மாவட்ட மக்கள், பொங்கல் போன்ற தமிழரின் விசேஷ நாட்களிலும் பென்னி குயிக்குக்கு பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications