நாற்றமெடுத்த கழிவறைகள்... வெகுண்டெழுந்த மும்பை நாகர்கோவில் ரயில் பயணிகள் - வீடியோ

மும்பை நாகர்கோவிலெக்ஸ்பிரஸ் ரயிலில்பயணிகள்போதிய தண்னீர் இல்லாத காரணத்தாலும் கழிப்பறைகள்சுத்தம் செய்யப்படாத காரணத்தாலும் ஈரோடு ரயில்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமலும் போதிய தண்ணீர் வசதி இல்லாததைக் கண்டித்தும் ஈரோட்டில் ரயிலை நிறுத்தி பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்தது. மும்பையிலிருந்து ரயில் புறப்பட்ட சில மணிநேரங்களில் ரயிலில் தண்ணீர் வரவில்லை. இதனால் கழிப்பறைகள் மிகவும் அசுத்தமடைந்தன.

 Mumbai nagarkoil express train passengers protested in Erode

ரயில் பயணிகள் பலமுறை இதுகுறித்து டிடிஆரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தண்ணீர் இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் ரயில் பெட்டிகளில் அசுத்தமான வாடை வீச ஆரம்பித்துவிட்டது.

இதைப் பொறுத்துக்கொள்ள இயலாத பயணிகள், ஈரோட்டில் ரயில் வந்த போது, அவசரச் சங்கிலியைப்பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, அனைத்துப்பயணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் சில மணிநேரம் அங்கு நின்றது.

பயணிகளின் போராட்டத்தைக் கண்ட ரயில்வே அதிகாரிகள் உடனடியாக கழிப்பறைகளை சுத்தம் செய்து, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பினர். அதனையடுத்து ரயில் அங்கிருந்து கிளம்பி நாகர்கோவில் நோக்கிச் சென்றது.

ரயில்பெட்டிகளில் தண்ணீர் நிரப்புதல்,கழிவறை சுத்தம் செய்தல் ஆகிய வேலைகளுக்கான கான்ட்ராக்ட் முடிந்துவிட்டதால் புதிய கான்ட்ராக்டுகளை ரயில்வே நிர்வாகம் நியமிக்காததே இந்த பிரச்சனைக்குக் காரணம் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+