திருவாரூர் கூட்டத்தைக் கலக்கிய எடப்பாடியாரின் பூனை - முனிவர் கதை.. யாருக்கு??!!
திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பூனை முனிவர் கதை சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
திருவாரூர்: அதிமுகவின் வலிமை எப்படிப்பட்டது என்று திருவாரூரில் பூனை முனிவர் கதை சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான சூழல் உருவாகியுள்ளது. பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் உற்சாகமாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
சாமானியர்களையும் சரித்திர நாயகர்களாக மாற்றும் வல்லமை படைத்தது அதிமுக என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை விளக்கும் வகையில் ஜெயலலிதா பாணியில் பூனை முனிவர் கதை ஒன்றை கூறினார்.

பூனை முனிவர் கதை
"ஒரு காட்டில் முனிவர் ஒருவர் வசித்து வந்தார். அவரது ஆசிரமத்தில் பூனையை வளர்ந்து வந்தது.
அந்த பூஜை காட்டில் உள்ள மிருகங்களை பார்த்து அஞ்சியது. எனவே தன்னை சிங்கமாக மாற்றிவிடுமாறு முனிவரிடம் கெஞ்சியது.

சிங்கமாக மாறிய பூஜை
முனிவரும் அந்த பூனையை சிங்கமாக மாற்றினார். காட்டில் சிங்கமாக உலாவந்த சிங்கமும், தன்னைப்போல பிற சிங்கங்கள் இருப்பதை பார்த்தது. சிங்கத்தை விட வலிமையான மிருகமாக தன்னை மாற்றுமாறு முனிவரிடம் மீண்டும் கேட்டுக்கொண்டது.

கொல்ல யோசித்த பூனை
உடனே சிங்கத்தை வல்லமை படைத்த சர்வம் மிருகமாக மாற்றினார் முனிவர். சர்வமாக மாறிய பூனையோ கம்பீரமாக சுற்றி வந்தது.
திடீரென்று அந்த பூனைக்கு கர்வம் தலைக்கு ஏறவே, தன்னைவிட வலிமையான மிருகத்தை முனிவர் உருவாக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசித்தது. உடனே முனிவரை கொன்று விடலாம் என்று நினைத்தது.

கெட்ட எண்ணம்
பூனையின் கெட்ட எண்ணத்தை உணர்ந்த முனிவர் பூனையிடம், உன்னை எப்படி மாற்றினாலும் நீ பூனையாகவே இருக்கிறாய் எனவே மீண்டும் உன்னை பூனையாகவே மாற்றுகிறேன் என்று கூறி பூனையாக்கினார்.

வாலை சுருட்டிய பூனை
பூனையும் வாலை சுருட்டிக்கொண்டு முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டது. இதில் வலிமை மிக்க முனிவர்தான் அதிமுக, அந்த பூனை யார் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் என்று கூறி நிறுத்தினார். அப்போது தொண்டர்கள் எழுப்பிய கை தட்டல் அடங்க வெகு நேரமானது.
பூனை யாராக இருக்கும் சசிகலாவா? டிடிவி தினகரனா? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர் அதிமுக தொண்டர்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications