ரித்தீஷ் மீது தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கொலை மிரட்டல் புகார்
சென்னை: நடிகர் ரித்தீஷ் தன் பழைய கூட்டாளியான திமுகவை சேர்ந்த பூச்சிமுருகனுடன் சேர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மாலை ஏராளமான திரை உலக மற்றும் நாடக உலக நடிகர்-நடிகைகள் திரண்டு வந்தனர். நடிகர் எம்.ஏ. கிச்சா ரமேஷ் தலைமையில் வந்த அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிச்சா ரமேஷ், நான் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரில் வசிக்கிறேன். சினிமாவில் நடித்து வருகிறேன். நடிகர் சங்க உறுப்பினராக உள்ளேன். இங்கு வந்துள்ள அனைவரும் நடிகர் சங்க உறுப்பினர்கள்தான். நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம். அவருக்கு ஓட்டும் சேகரித்து வருகிறோம்.
இதனால் எதிர் குழுவைச் சேர்ந்த நடிகர் ரித்தீஷ், பூச்சிமுருகன் மற்றும் நடிகர் விஜய் கார்த்திக் ஆகியோர் எங்களை ஏற்கனவே மிரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் எனது செல்போனில் வட பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல பேசி நடிகர் ரித்தீஷ் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ரித்தீஷ் ஏற்கனவே தி.மு.க.எம்.பி.யாக இருந்தவர். இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த பூச்சிமுருகனுடன் சேர்ந்து எங்களை மிரட்டுகிறார்.
ரித்தீஷ் மிரட்டிய பேச்சை செல்போனில் பதிவு செய்து அதை சி.டி.யாக போட்டு போலீசாரிடம் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கிச்சா ரமேஷ் உடன் வந்திருந்த மற்ற நடிகர்-நடிகைகளும் தங்களுக்கும் மிரட்டல் வருவதாக தெரிவித்தனர். இதுபோன்ற புகார் மனுக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications