கோவையில் கொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
சென்னை: கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் மனைவி யமுனா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த 22ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் சசிகுமாரின் மனைவி யமுனா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது வீட்டில் யமுனா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். யமுனா தற்போது துடியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications