திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருகன் சிலை சூலம் திருட்டு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருகன் சிலை சூலம் திருடுபோனது தொடர்பாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெண்கலத்தாலான தண்டாயுதபாணி சிலையும் சூலமும் திருட்டு போயுள்ளதாக கோயில் இணை ஆணையர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலகப் பிரசித்திபெற்றது. இந்த கோயில் இருப்பு அறையில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த பல சிலைகளும் கோயில் சிலைகளும் உள்ளது. அண்மையில், அண்ணாமலையார் கோயிலுக்கு புதிதாக வந்த இணை ஆணையர், கோயிலில் உள்ள சிலைகளின் இருப்பு பட்டியலை பரிசோதனை செய்துள்ளார். அப்போது கோயிலில் உள்ள சிலைகளின் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பித்தளையால் ஆன தண்டாயுதபாணி சிலையும் ஒரு பித்தளை சூலமும் இருப்பு அறையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காணாமல் போயுள்ள தண்டாயுதபாணி என்கிற முருகன் சிலை 1957 ஆம் ஆண்டு ஒரு பக்தர் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அதே போல, காணாமல் போன சூலம் 1982 ஆம் ஆண்டு ஒரு பக்தரால் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில், தண்டாயுதபாணி சிலை மற்றும் சூலம் காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்த இணை ஆணையர் ஞானசேகர் இன்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. பொன்னியிடம் கோயில் இருப்பு அறையில் இருந்து சிலைகள் திருடப்பட்டு இருப்பதை புகாராக அளித்தார். புகாரில் தண்டாயுதபாணி சிலை பித்தளை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கோயிலில் உள்ள ஒரு சிலர் அதை வெங்கல சிலை என்று கூறுகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிலை திருடு போயிருப்பது குறித்த புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. இந்த வழக்கை திருவண்ணாமலை டவுன் போலீஸ் விசாரிப்பதா? அல்லது குற்றப்பிரிவு போலீஸ் விசாரிப்பதா? அல்லது சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுவதா என்று ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications