மணி கடையில் ஓசியில் ஆட்டுக்கறி கடன் கேட்ட மணிகண்டன்.. கொடுக்காததால் கத்திக் குத்து!
திருப்பூர்: திருப்பூரில், ஆட்டுக் கறியை கடனாக கேட்டுள்ளார் ஒருவர். அதற்கு கடைக்காரர் மறுக்கவே கறி வெட்டும் கத்தியை எடுத்து குத்தி விட்டார். இதில் கடைக்காரர் படுகாயமடைந்தார். கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்துளளனர்.
பாப்பநாயக்கன்பாளையத்தில் கறிக் கடை வைத்திருப்பவர் மணி. இவரிடம் மணிகண்டன் என்ற இளைஞர் வந்துள்ளார். ஆட்டுக் கறியைக் கடனாக கொடுக்குமாறும், பினனர் பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.
கறியெல்லாம் கடனாக தர முடியாது என்று மணி மறுத்து விட்டார். இதனால் கோபமாக திரும்பிய மணிகண்டன், குடித்துள்ளார். பின்னர் போதையில் கடைக்கு வந்து மணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென கறி வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து மணியை குத்தியுள்ளார். அதைத் தடுத்தார்
மணி.
இதில் அவரது கையில் கத்தி குத்தி காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
மணியைக் குத்திய மணிகண்டனை போலீஸார் கைது செய்துள்ளனர்.