ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய மர்ம படகு- தீவிர விசாரணை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது குறித்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் கடற்பரப்பில் அடிக்கடி மர்ம படகுகள் கரை ஒதுங்குவதும் போலீசார் விசாரணை நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் தங்கச்சி மடம் அருகே மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது.
இந்த படகு இலங்கையைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் இருந்து கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் மர்ம படகு கரை ஒதுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications