திண்டுக்கல் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்
ஒட்டன் சத்திரம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் என்ன? என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி பஞ்சாயத்து களத்துக்காட்டு தோட்டத்தில் சமீபத்தில் விழுந்த மர்ம பொருள் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்ப பயன்படும் ஒரு பாகமாகும் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் வானில் இருந்து ஒரு மர்ம பொருள் விழுந்தது. பலத்த சத்தத்துடன் விழுந்த அந்த மர்ம பொருள் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், அந்த பொருள் எதில் இருந்து விழுந்தது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், அது வெடிபொருள் இல்லை என்பதை உடனடியாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனால் விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து விமான பாதுகாப்புத்துறை மற்றும் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரகளை மாவட்ட நிர்வாகம் தொடர்புகொண்டது. மர்ம பொருளின் புகைப்படமும் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. அதை ஆய்வு செய்த விமான பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பொருள் விமானத்தின் பாகம் இல்லை என அறிக்கை அளித்துள்ளனர்.
இதனால் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் விண்வெளியில் இருந்து விழுந்ததா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. ஆனால், இதுவரை அந்த பொருள் என்னவென்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அந்த பொருள் என்னவென்பதை அறிவதற்கான ஆர்வமும் பொதுமக்களிடம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போது, அந்த பொருள் ஒட்டன்சத்திரம் தாசில்தாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றி பல துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
இந்த மர்ம பொருள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலைப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் வெங்கட்ராம், பொங்கியணன், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து அந்த பொருளை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் இறுதியில் அவர்கள் கூறியதாவது:-
இந்த பொருளானது, வானில் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்ப பயன்படும் ஒரு பாகமாகும். ஆனால், இந்திய விஞ்ஞானிகள் வட்டவடிவமான பொருளை மட்டுமே பயன்படுத்துவார்கள்.
இந்த பொருள் உருளை வடிவத்தில் இருப்பதால் இது வெளிநாட்டு ராக்கெட்டில் பயன்படுத்துவதாக இருக்கலாம்.மேலும், ராக்கெட்டின் பாகங்கள் வளிமண்டத்தில் நுழையும்போது அங்கேயே எரிந்து சாம்பலாகி விடும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications