ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் திடீர் நீக்கம்: சீமான் அறிவிப்பு
சென்னை: ஆலங்குடி சட்டசபைத் தொகுதி நாம் தமிழர வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்ச்செல்வியை நீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மு.தமிழ்ச் செல்வி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவரை வேட்பாளர் பொறுப்பிலிந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருமதி. மு.தமிழ்ச் செல்வி எனும் தாங்கள், பொறுப்பாளர்களுடன் சரியாக செயல்பட்டு பயணிக்க முடியாத காரணத்தாலும், கட்சி பெருங்கனவுடன் நீண்ட பெறும்பயணம் செல்ல வேண்டி இருப்பதாலும், தங்களை வேட்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு அந்தப் பொறுப்பை மீளப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications