For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களது தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு பேசுங்கள் : முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி பதிலடி

சீமான் மீதான முதல்வரின் விமர்சனத்திற்கு தங்களின் தேர்தல் செயற்பாட்டு அறிக்கையை படித்து விட்டு விமர்சியுங்கள் என்று நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : சீமானுக்கு போராட மட்டும்தான் தெரியும். பிரச்னைகளுக்கான தீர்வு சொல்லத் தெரியாது என்று விமர்சித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தங்கள் தேர்தல் செயற்பாட்டு வரைவு அறிக்கையைப் படித்துவிட்டு பேசுமாறு நாம் தமிழர் கட்சியினர் சவால் விடுத்துள்ளனர்.

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருவதாகவும், அது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து இருந்தார்.

Naam Tamilar Party Replies to CM accusation on Seeman

இந்த விமர்சனத்திற்கு பதில் சொன்ன தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சீமானுக்குப் போராட மட்டுமே தெரியும். ஆனால், பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லத் தெரியாது என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

முதல்வரின் இந்தக் கருத்துக்கு, ட்விட்டரில் நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர். அதில், கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் செயற்பாட்டு வரைவு அறிக்கையை படித்துவிட்டு கருத்து கூறுங்கள் முதல்வரே ! என்று பதிவிட்டுள்ளனர்.

English summary
Naam Tamilar Party Replies on CM accusation on Seeman. Earlier TN CM Edappadi Palanisamy says that, Seeman only knows to Protest and he doesnot have any solutions for the Problems of TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X