எந்த அணி வென்றாலும் நடிகர் சங்கம் உடைவது உறுதி!
சென்னை: இன்று இரவு நடக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அணி வென்றாலும் தோற்றாலும் நடிகர் சங்கம் இரண்டாகப் பிளவுபடுவது உறுதி என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சங்க உறுப்பினர்கள் இரு அணியாக பிளவுபட்டு மோதிக் கொண்டு நிற்கின்றனர்.
ஒரு அணி உறுப்பினர்கள் மீது எதிரணி உறுப்பினர்கள் சகதி வாரிப் பூசுகிறார்கள். இனி இரு தரப்பும் ஒன்று சேரவே முடியாத அளவுக்கு பெரும் பிரிவினை ஏற்பட்டுள்ளது.

இனி இந்த அணிகள் ஒன்று சேர்வது கஷ்டம். உடைந்தது உடைந்ததுதான், ஒட்டாது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தேர்தலில் தங்கள் அணி தோற்றால், இருக்கிற ஆதரவாளர்களுடன் புதிய நடிகர் சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர் இரு அணியினருமே. அப்படி உருவாகும் புதிய சங்கத்துக்கு தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயர் சூட்டவும் முடிவெடுத்துள்ளனராம்.
இதற்கு சங்கத்துக்கு வெளியில் உள்ள திரையுலக முக்கியப் பிரமுகர்கள் சிலரும் ஆதரவளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆக தேர்தலுக்குப் பின்னும் திரையுலகில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.












Click it and Unblock the Notifications