வீழ்த்திய சுனாமியில் விஸ்வரூபமெடுத்த அரசுப் பள்ளி - நாகையில் ஒரு சாதனை ஸ்கூல்!
நாகை: நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஒன்று தரம் உயர்த்தப்பட்டு தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று நாகப்பட்டினம். இந்த மாவட்டத்தில்தான் உயிர்சேதமும் அதிகம், பொருட்சேதமும் அதிகம்.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமமான கீச்சாங்குப்பத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சுனாமி பேரலையால் உருக்குலைந்தன.

புதிய பள்ளிக் கட்டிடங்கள்:
இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் முற்றிலுமாக தரைமட்டமானது. இந்நிலையில் 11 ஆண்டுகளில் கிராம மக்களின் முயற்சியாலும், தொண்டு நிறுவனத்தின் உதவியாலும் இந்த பகுதியில் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டன.

தரம் உயர்த்தப்பட்ட கல்வி:
எனினும், தொடக்கத்தில் இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டினர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக பள்ளி நிர்வாகமும், கிராம பள்ளிக் குழுவும் இணைந்து இப்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கல்வியை வழங்க முடிவு செய்தது.

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்:
அதன் அடிப்படையில், தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த அரசு பள்ளி "ஸ்மார்ட் கிளாஸ்" பள்ளியாக மாற்றப்பட்டது. தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 100 சதவீத இணையதள வசதியுடன் பள்ளி முற்றிலும் கணினி மயாக்கப்பட்டது.

முன்மாதிரி பள்ளி:
தனியார் பள்ளிகளைவிட மாணவர்களுக்கு தரம் உயர்ந்த கல்வியை வழங்கி வரும் இந்த அரசுப் பள்ளி, தற்போது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முன் மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications