குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.. நக்கீரன் கோபால் உருக்கம்
பத்திரிகை சுதந்திரத்திற்கு பக்க பலமாக நீதிமன்றம் நின்றிருக்கிறது என கோபால் கூறினார்.
Recommended Video

சென்னை: தன்னை கைது செய்ததை கண்டித்து தனக்காக கண்டன குரல் கொடுத்த அனைவருக்கும் நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக தனக்காக பேசிய பத்திரிகையாளர் இந்து என்.ராமிற்கு நன்றியை உரித்தாக்கி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சாலை மறியல்
அதேபோல, கோபாலை கைது செய்தது அச்சுறுத்தல் நடவடிக்கை என்றும், உடனடியாக அவரை விடுவிக்க கோரியும் பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் சிந்தாதிரிப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

வழக்கு ரத்து
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று கூறி, அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த நக்கீரன் கோபால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பக்க பலமான நீதிமன்றம்
ஏப்ரலில் வெளியிட்ட செய்திக்கு இப்போது தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தன்னை கைது செய்த போது காரணம் ஏதும் கூறவில்லை. தனது செல்போனை பறித்து கொண்டனர். கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பக்க பலமாக நீதிமன்றம் நின்றிருக்கிறது. இந்த போரில் வெல்ல உதவிய அத்தனை ஊடக நண்பர்களுக்கும், திறமையாக வழக்காடிய வக்கீல்களுக்கும் என் நன்றிகள்.

அனைவருக்கும் நன்றி
தன் கைதுக்காக கண்டித்து குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. குறிப்பாக எனக்காக பேசிய பத்திரிக்கையாளர் இந்து என்.ராமிற்கு என் நன்றிகள். அதேபோல, தம்மை வந்து நேரில் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications