குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.. நக்கீரன் கோபால் உருக்கம்
பத்திரிகை சுதந்திரத்திற்கு பக்க பலமாக நீதிமன்றம் நின்றிருக்கிறது என கோபால் கூறினார்.
Recommended Video

சென்னை: தன்னை கைது செய்ததை கண்டித்து தனக்காக கண்டன குரல் கொடுத்த அனைவருக்கும் நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக தனக்காக பேசிய பத்திரிகையாளர் இந்து என்.ராமிற்கு நன்றியை உரித்தாக்கி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சாலை மறியல்
அதேபோல, கோபாலை கைது செய்தது அச்சுறுத்தல் நடவடிக்கை என்றும், உடனடியாக அவரை விடுவிக்க கோரியும் பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் சிந்தாதிரிப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

வழக்கு ரத்து
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று கூறி, அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த நக்கீரன் கோபால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பக்க பலமான நீதிமன்றம்
ஏப்ரலில் வெளியிட்ட செய்திக்கு இப்போது தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தன்னை கைது செய்த போது காரணம் ஏதும் கூறவில்லை. தனது செல்போனை பறித்து கொண்டனர். கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பக்க பலமாக நீதிமன்றம் நின்றிருக்கிறது. இந்த போரில் வெல்ல உதவிய அத்தனை ஊடக நண்பர்களுக்கும், திறமையாக வழக்காடிய வக்கீல்களுக்கும் என் நன்றிகள்.

அனைவருக்கும் நன்றி
தன் கைதுக்காக கண்டித்து குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. குறிப்பாக எனக்காக பேசிய பத்திரிக்கையாளர் இந்து என்.ராமிற்கு என் நன்றிகள். அதேபோல, தம்மை வந்து நேரில் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications