நாமக்கல் கார் விபத்தில் 3 பேர் பலி- திருச்சி ஆம்னி பஸ்சில் தீ -30 பயணிகள் தப்பினர்!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே ஓவியம்பாளையம் பிரிவு சாலை அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Namakkal car accident - 3 died

மதுரையிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ் நள்ளிரவு 1 மணிக்கு சமயபுரம் டோல்கேட்டில் டோக்கன் வாங்க நின்றபோது பஸ்ஸின் பின்புறம் புகை வந்துள்ளது. இதை கண்ட டோல்கேட் பாதுகாவலர்கள் பஸ்ஸின் டிரைவரிடம் தெரிவித்து உள்ளனர்.

அவர் உடனடியாக பஸ்ஸை சாலையோரம் நிறுத்தி 30 பயணிகளையும் அவசர, அவசரமாக கீழே இறக்கிவிட்டு உள்ளார். அதற்குள் வேகமாக தீப்பரவி பஸ் முழுவதும் தீப்பற்றி எரிய துவங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் ஆம்னி பஸ் முழுவதுமாக எரிந்து சேதமானது. டோல்கேட் பாதுகாவலர்களின் முன்னெச்சரிக்கையால் பயணிகள் யாரும் தீ விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+