நாமக்கல்லில் 103 வயது பாட்டியின் பிணத்தை புதைக்க நடந்த போராட்டம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லில் இறந்துபோன 103 வயதான பாட்டியின் பிணத்தை எடுத்துச் செல்லும் வழியில் எதிர்த்தரப்பினர் கம்பிவேலிகள் அமைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத்து.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொட்டணம்புதூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் ரங்கம்மாள் என்ற 103 வயது பாட்டி இறந்து விட்டார்.

பிணத்தை எடுத்து செல்லும் பாதையில் உள்ள நிலத்தை தனது நிலம் எனக்கூறி ஒருவர் கம்பி வேலி அமைத்துவிட்டார். இதனால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மூதாட்டி பிணத்தை எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது

150 வருடமாக பிணத்தை எடுத்து செல்லும் பாதையை அடைத்து பட்டா நிலம் என்று சொல்லி அந்த நிலத்தின் உரிமையாளர் கம்பிவேலி போட்டதற்கு காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .

வழக்கமான பாதையில்தான் பிணத்தை எடுத்து செல்வோம் என்றும் கம்பி வேலியை அகற்றாவிட்டால் அந்த கம்பி வேலி அருகே பிணத்தை வைத்து மறியலில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர். கம்பி வேலி அகற்றப்படும் வரை பிணத்தை புதைக்க விடமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

இதனால் கிராமத்தில் பதட்டம் நிலவியது. இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த பொட்டணம்புதூர் காலனி பகுதியில் 70 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+