3 நாட்களாக முடங்கிக் கிடக்கும் "எம்.ஜி.ஆர்".. ஹேக் செய்தவர்கள் என்ன அவ்வளவு பெரிய "அப்பாடக்கரா"??
சென்னை: நமது எம்.ஜி.ஆர். இணையதளம் தொடர்ந்து முடங்கியே இருக்கிறது. 3 நாட்களாகியும் இணையதளத்தை மீட்க முடியாத அளவுக்கு ஹேக் செய்தவர்கள் என்ன அவ்வளவு பெரிய "அப்பாடக்கரா" என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது எம்.ஜி.ஆர். இதன் இணையதளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் திமுக வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது. அதிமுகவுக்கு படு தோல்வி கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்புக்கு விழுந்த வாக்குகள் கூறின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் இது வைரல் ஆனது. அதிமுகவின் குழப்பத்தை பலரும் கேலி செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில் தங்களது தளம் ஹேக் செய்யப்பட்டதாக நமது எம்ஜிஆர் நிர்வாகம் கூறியது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது.
ஆனால் முடக்கப்பட்டு 3 நாட்களாகியும் இந்தத் தளம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து முடங்கியே இருக்கிறது. அந்த தளத்திற்குப் போனால் ஹேக் செய்யப்பட் தகவலோடு நிற்கிறது. வேறு எதுவும் இல்லை.
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் கூட அதிமுகவினரால் தங்களது அதிகாரப்பூர்வ நாளிதழ் இணையதளத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லையே என்று அதிமுகவினரே கூட புலம்பி வருகின்றனராம்.
முடங்கியுள்ள நமது எம்ஜிஆர் தளம் மீண்டும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்புவோம்.












Click it and Unblock the Notifications