For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்னை தமிழ் மீது ஆணை.. இனி தினகரன் அணியில் சேரமாட்டேன்.. நாஞ்சில் சம்பத் உறுதி

டிடிவி தினகரன் அணியில் இனி சேரப்போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் அன்னை மீது ஆணையாக தினகரன் கூட சேரமாட்டேன் - நாஞ்சில் சம்பத்- வீடியோ

    சென்னை: டிடிவி தினகரன் அணியில் இனி சேரப்போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

    டிடிவி தினகரன் அணியின் போர்க்குரலாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாக இருந்தார்.

    Nanchil sampath is promising that he will not join in TTV Dinakarans team anymore

    டிடிவி தினகரனை தமிழக முதல்வராக்கியே தீருவேன் என சூளுரைத்த அவர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் தினகரன் தனி அமைப்பு தொடங்கியதில் உடன்பாடு இல்லாத நாஞ்சில்சம்பத் அவரது அணியில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார்.

    அண்ணாவையும் திராவிடத்தையும் புறக்கணித்து தினகரனால் அரசியல் செய்ய முடியாது என்ற அவர் தற்போது தான் அரசியலில் இல்லை என்றார். மேலும் தினகரன் அணியினர் என்னிடம் சமாதானம் பேச நினைப்பது வீண் வேலை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

    மேலும் அன்னை தமிழ் மீது ஆணையாக இனி தினகரன் அணியில் சேர மாட்டேன் நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    English summary
    Nanchil sampath is promising that he will not join in TTV Dinakaran's team anymore. Nanchil sampath left from Dinakaran's party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X