தினகரன் பதுங்குவது பாய்வதற்குதான்... சொல்கிறார் 'துடைச்சுக்குவேன்' புகழ் நாஞ்சில் சம்பத்!
டிடிவி தினகரன் பதுங்குவது பாய்வதற்குதான் என அவரது தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் பதுங்குவது பாய்வதற்குதான் என அவரது தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனை எடப்பாடி தரப்பு ஒதுக்கி வைத்துள்ள நிலையில் நாஞ்சில் சம்பத்தின் இந்த பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து எடப்பாடி தரப்பு டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட டிடிவி தினகரள் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டதாக கூறினார்.
ஆனால் ஒரு மாத சிறைவாசத்துக்குப் பின் சென்னை திரும்பிய தினகரன் தீவிர அரசியல் ஈடுபட போவதாக கூறினார். மேலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இரு அணிகளும் இணைய 60 நாட்கள் கெடுவும் அளித்தார்.

எச்சரிக்கை விடுத்த டிடிவி
இதைத்தொடர்ந்து சில எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து கொடி பிடித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு என் செயல்பாடுகளை பாருங்கள் என இரு அணிகளுக்கும் எச்சரிக்கை விடுவது போல் பேசினார்.

பதுங்குவது பாய்வதற்குதான்
இருப்பினும் தினகரனும் சரி அவரது ஆதரவாளர்களும் சரி அடக்கியே வாசித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், தினகரன் பதுங்குவது பாய்வதற்குதான் என கூறியுள்ளார்.

சுற்றுப்பயணம் செய்ய திட்டம்
மேலும் தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். அடுத்த மாதம் 5ஆம் தேதி தேனியில் முதல் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

மும்பை சென்றுள்ள தினகரன்
இதனிடையே தினகரன் இன்று காலை திடீரென மும்பைக்கு சென்றுள்ளார். காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து அவர் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications