நாங்குநேரி இரட்டை கொலை - 20 பேர் கைது
நெல்லை: நாங்குநேரி அருகே நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கரந்தாநேரி மற்றும் பாணங்குளத்தை சேர்ந்த இருபிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் இருந்து வந்தது. கடந்த 12ம் தேதி இரவு கரந்தாநேரியை சேர்ந்த வேலுச்சாமி, மாரிக்கனி மற்றும் நெடுங்குளம் கணேசன் ஆகியோர் வெட்டப்பட்டனர். இதில் மாரிகனி, வேலுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பாணங்குளத்தை சேர்ந்த 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நாங்குநேரி டிஎஸ்பி சண்முகம், வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய பாணங்குளத்தை சேர்ந்த சின்னபாண்டி, கருப்பசாமி, ரெங்கன், செல்வம், மற்றொரு கருப்பசாமி ஆகிய 5 பேரை தனிப்படையினர் முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் விசாரணை நடத்தினார்.
இதில் பாணங்குளத்தை சேர்ந்த சின்னபாண்டி, வானமாலை ஆகியோர் டிவி பழுது பார்ப்பதற்காக கரந்தாநேரி வழியாக பைக்கில் சென்றிருக்கின்றனர். இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாணங்குளத்தை சேர்ந்தவர்களை பழிவாங்கும் நோக்கில் வேலுசாமி, மாரிக்கனியை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் சேரன்மகாதேவி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மாயக்கண்ணன் அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். மற்ற 10 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கொலையான வேலுச்சாமியின் உறவினர்கள் விரைந்து வந்து கராந்நேரி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் மற்றொரு பிரிவினர் வேலுச்சாமி வீட்டை நோக்கி கற்களை வீசயதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி பாணங்குளததை சேர்ந்த நல்லகண்ணு, சுப்பிமணியன், முருகன், பழனி, பண்டாரம், சுப்பையா, ஜெய்சங்கர், சண்முகவேல், கொம்பையா, மற்றொரு கொம்பையா, முருகன், நம்பிராஜன், வேல்முருகன், முத்து, ஆபத்துகாத்தான் ஆகிய 15 பேரை கைது செய்தனர். அவர்கள் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications