சிம்பு திருந்துவார் என்று காத்திருக்கும் நாஞ்சில் சம்பத்
சென்னை: பெண்ணடிமைத்தனத்துக்கு முடிவு கட்டிய பெரியார் வாழ்ந்து வரலாறு படைத்த தமிழ்நாட்டில், இன்றைக்கு ஒரு இருண்ட காலத்துக்கு தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதைப் போல சிம்பு இப்படி ஒரு "பீப்" பாடலைப் பாடியதன் மூலம், தமிழகத்துப் பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார். பெண்களின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி இருக்கும் சிம்பு திருந்துவார் என்று காத்திருப்பதாக கூறியுள்ளார் அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
இன்றைய சூழ்நிலையில் தான் எதற்கெல்லாம் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத். இந்த பேட்டியை படித்ததுதான் தாமதம் அவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் டுவிட்டர்வாசிகள்.
தனது காத்திருப்பு பற்றி கூறியுள்ள நாஞ்சில் சம்பத், 'இது குழந்தை பாடும் தாலாட்டு... இது நதியில்லாத ஓடம்' என்று பாடல் எழுதிய டி.ராஜேந்தர் மகனா இப்படி சீரழிகிறார் என்று எண்ணுகிறபோது என் சிந்தை வலிக்கிறது.

சிம்பு திருந்துவார்
பெண்களைக் கண்களாக கொண்டாடுகிற பெருந்தன்மை உள்ள தமிழகத்தில், பெண்ணடிமைத்தனத்துக்கு முடிவு கட்டிய பெரியார் வாழ்ந்து வரலாறு படைத்த தமிழ்நாட்டில், இன்றைக்கு ஒரு இருண்ட காலத்துக்கு தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதைப் போல சிம்பு இப்படி ஒரு "பீப்" பாடலைப் பாடியதன் மூலம், தமிழகத்துப் பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார். அவர்களின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் திருந்துவார் என்று காத்திருக்கிறேன்.

கழகத்தின் சிப்பாய்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 28-வது நினைவு நாளில் அவரை வணங்கிப் போற்றும் அம்மா அவர்களுக்காக ஆயுதத்தைக் கீழே போடாத கழகத்தின் சிப்பாயாக அணிவகுக்கக் காத்திருக்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி. இந்தக் கட்சியை எந்த வகையிலும் எதிர்கொள்ள முடியாத சில பேர்வழிகள், மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து விட்டவர்கள், குடும்ப அரசியல் நடத்தி தமிழகத்தை குட்டிச் சுவராக்கியவர்கள், சொந்த சுய லாபத்திற்காக தமிழகத்தின் உரிமையைக் காவு கொடுத்தவர்கள், இன்றைக்கு தப்புத் தப்பாய் செய்கின்ற எல்லாப் பிரசாரத்தையும் அதே வழியில் எதிர் கொள்ளக் காத்திருக்கிறேன்.

மீண்டும் முதல்வராக
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனை மீட்டுத் தந்து அதை ஒரு பொதுத்துறை நிறுவனமாக மீண்டும் இயங்குவதற்கு வாய்ப்பளித்த அம்மாவை மீண்டும் முதல்வராக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.காவேரி பிரச்னையில், நடுவர் மன்றத்தினுடைய இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு, காவிரி நீரில் தமிழக மக்கள் உரிமையை நிலைநாட்டித் தந்த அம்மாவை அரியணையில் அமர்த்த, தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

நானும் காத்திருக்கிறேன்
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கி தென்னக மாவட்டங்களுக்கு பாசனத்துக்கும், தாகத்துக்கும், தண்ணீருக்கும் உத்தரவாதம் தந்த அம்மாவை மீண்டும் முதலமைச்சராக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களோடு நானும் மக்களில் ஒருவனாகக் காத்திருக்கிறேன்...! என்று கூறியுள்ளார்.
|
கலாக்கும் வலைஞர்கள்
நாஞ்சிலாரின் பேட்டிக்கு பதிலாக மீம்ஸ் போட்டு கலாய்க்கின்றனர் டுவிட்டர்வாசிகள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications