கருணாநிதியை தாக்கப் போறாங்களாம், ஓட்டு வாங்கப் போறாங்களாம்.. நாஞ்சில் சம்பத் "லபோ திபோ"!
காஞ்சிபுரம்: நாஞ்சில் சம்பத் பேசும்போது கவனித்துள்ளீர்களா.. பழைய வில்லன் நடிகர் அசோகன் பேசுவது போலவே இருக்கும். அவரது வாயால் எந்த சீரியஸ் சமாச்சாரத்தைக் கேட்டாலும் காமெடியாகவே தோன்றும். காரணம், அவரது வாயோட வாஸ்து அப்படி!
அந்த வகையில் தற்போதும் ஒரு "பயங்கரமான" தகவலை படா ஷோக்காக சொல்லி விட்டுப் போயுள்ளார் நாஞ்சில் சம்பத்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.
செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்தபோது சம்பத் கூறுகையில்,
சென்னையில் பிரச்சாரக் கூட்டத்தின்போது கருணாநிதி தாக்கப்படுவது போன்றும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பது போன்றும் ஊடகங்களில் பொய் செய்தியை வெளியிட்டு அனுதாப வாக்குகளை அள்ள திமுக ரகசிய திட்டம் தீட்டி வைத்துள்ளது என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு அதிமுகவினருக்கே கூட விலா எலும்பில் சிரிப்பு வந்திருக்கும். ஆனாலும் "நாங்கள் காத்திருக்கோம்" என்ற ரேஞ்சுக்கு சொல்லிவிட்டுப் போனது அந்த நேரத்திற்கு கிடைத்த நல்லதொரு தமாஷாகவே பொதுமக்கள் பார்த்தனர்.












Click it and Unblock the Notifications